Posts

Showing posts from 2019

கடல் பாதுகாப்பாளன்

Image
நாட்டை குப்பை மேடாக மாற்றி இப்போது கடலையும் அழித்துக்கொண்டு உள்ளோம். நாம் சுவாசிக்கும் O² பூமியைவிட கடலில்தான் அதிகளவு கிடைக்கின்றது. இந்த உலகம் முழுவதும் 500 பில்லியினுக்கும் மேலான மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு உலகமெங்கும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்  பைகள் மட்டும் ஒரு மில்லியன். மலை போல குவித்து வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் மொத்த எடை 12 மில்லியன் மெக்ரிக் தொன். பிளாஸ்டிக் மக்காத ஒரு பொருள். அவை மக்கிப் போக சுமார் 500 ஆண்டுகளிலிருந்து 1000 ஆண்டுகள் ஆகும் என்கிறது அறிவியல். கடந்த 40 வருடங்களாகத்தான் பிளாஸ்டிக் பொருள்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் எங்கே போயிருக்குமென யூகிக்க முடிகிறதா? அமெரிக்காவில் இருக்கிற தீவு மிட் வேயில்  அல்பட்ராஸ் என்கிற கடற்பறவை இனம் வசிக்கிறது. அவை கடலில் நெடுந்தூரம் பறந்து, பறந்து தன் குஞ்சிற்கு உணவை எடுத்து வந்து ஊட்டுகிறது. 90 நாள்களே ஆன, அந்தப் பறவைக் குஞ்சு உணவை உட்கொள்கிறது. சி...

துபாயில் 15 கிலோ தங்கக்கட்டிகளை அதிகாரியிடம் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி!

Image
துபாயில் துப்புரவு தொழிலாளி வேலை செய்யும் இளைஞர் அலி மக்பூல்(வயது-27) பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 15 கிலோ தங்கம் அதாவது சுமார் 2.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள பையை கீழே கிடந்து கண்டெடுத்தார். இதையடுத்து அந்த பையை துபாய் சாலை போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைத்தார். என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்த எதையும் எப்பொதும் நான் மறக்கவில்லை என்று கூறினார். உன்னுடைய வருமானம் நேர்மையான மூலங்களிலிருந்து கிடைத்ததா என்பதை உறுதிப்படுத்திக் கொள் என்று எனது தந்தை எப்போதும் கூறுவார் என்று அவர் தெரிவித்துள்ளார். மாக்பூலை அண்மையில் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் Al Sabkha நேரில் அழைத்து கவுரவித்தார் என்று மேலும் தெரிவித்துள்ளார். எனக்கு வழங்கிய மரியாதைக்கு நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். நான் எனது கு டும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அதிகாரிகளின் பேஸ்புக்கில் செய்திகளைப் பகிர்ந்தேன் எல்லோரும் என்னை வாழ்த்தினார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது என்று நான் என் தந்தையிடம் சொன்னபோது, ​​நான் சரியானதைச் செய்தேன், அவர் என...

கத்தார் எயார்வெய்ஸ்ஸில் மயங்கி விழுந்த பயணி! இலங்கையில் அவசர தரையிரக்கம்!

Image
கத்தார் நாட்டின் விமானச் சேவையான கத்தார் எயார்வெய்ஸ் க்குச் சொந்தமான விமானம் ஒன்று இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (ஜுன் 30) பதிவாகியுள்ளது.  கத்தாரின் தோஹா நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குப் பறந்து கொண்டிருந்த A-380 900 ரக விமானத்தில் இருந்த பயணி ஒருவர் சுகயீனம் காரணமாக மயங்கி விழுந்தமையினால் சிகிச்சைக்காக இலங்கை பண்டார நாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிரக்கப்பட்டதாக விமான நிலையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குவைத் விமான நிலையம் பைலட் அடிப்படையில் முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் தொடங்கியது

Image
குவைத் விமான நிலையம் ஒரு பைலட் அடிப்படையில் முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் தொடங்கியது ஒரு வருடத்திற்கு முன்பு குவைத் ஏர்வேஸிற்காக நியமிக்கப்பட்ட டெர்மினல் 4 ஐ இன்று ஒரு பைலட் அடிப்படையில் 3 மாதங்களுக்கு பைலட் அடிப்படையில் பயன்படுத்துவதன் மூலம் குவைத் ஏர்வேஸிற்காக நியமிக்கப்பட்ட டெர்மினல் 4 ஐ அறிமுகப்படுத்தியது.  பயோமெட்ரிக் சாதனம் என்பது முனையத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் அணுகுமுறையின் ஒரு அங்கமாகும், அங்கு முக அடையாளம் காணும்போது பயணிகள் மற்றும் விமானத் தரவுகள் அணுகப்படும் என்று டிஜிசிஏ இயக்குநர் ஜெனரல் யூசெப் அல்-ஃப ou சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

குவைத்தில் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை கறுப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை:

Image
குவைத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து புகார் வந்தால் அந்த நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் சேர்த்து அந்த நிறுவனங்கள் தொடர்ந்து இயக்க முடியாதபடி குவைத் தொழிற்துறை அமைச்சகம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கும்.இப்படி நூற்றுக்கணக்கான கம்பெனிகளின் ஆவணங்கள் அரசு ரத்து செய்துள்ளது. இதுபோல் குவைத்தில் வேலை செய்யும் வீட்டுத் தொழிலாளர்களின்(Domestic workers) உரிமைகளை பறிக்கும் முதலாளிகளை(Sponsor) கருப்புப் பட்டியல் சேர்க்க குவைத் தொழிலாளர் துறை அமைச்சகம் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து தொடர்பு புகார்கள் வருவதால் இந்த புதிய நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாக தெரிகிறது.குவைத்தின் பிரபல தினசரி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தொழிலாளர் துறை அமைச்சக இயக்குநர் ஜெனரல் அஹ்மத்-அல்-முசா இதை தெரிவித்துள்ளார். வீட்டுத் தொழிலாளர்களிடம் இருந்து சம்பளம் வழங்காத புகார்கள், துன்புறுத்தல் புகார்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட புகார்கள் தினசரி அதிகரிக்கும் நிலையில் இதை அ...

குவைத்தில் நாளை முதல் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் தங்கியுள்ள Bachelors கண்டறியும் சோதனை தீவிரமாக இருக்கும்:

Image
குவைத்தில் நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த சில வருடங்களாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.   குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் வேலை செய்யும் இளைஞர்கள் வசிக்ககூடாது என்பது சட்டமாகும். இதையும் மீறி பல பகுதிகளில் இளைஞர்கள் வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகிறார்கள்.பல நேரங்களில் மோதல்கள் ஏற்படுவதும் அப்படிப்பட்ட நபர்களை கைது செய்து நாடுகடத்துவம் தொடர்பு நடைபெற்று வருகிறது. குவைத்தில் வசிக்கும் Bachelors (இளைஞர்கள்) மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளதால் குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இளைஞர்களை கண்டறியும் சோதனை நடத்த நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. நாளை(ஜூலை-1) முதல் குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் தங்கியுள்ள Bachelors(இளைஞர்களை) கண்டறியும் சோதனை நடத்த நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்கள் தங்கியுள்ளது உங்கள் பார்வைக்கு வந்தால் உடனடியாக 139 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குடும்பத்தினர் வசிக்கும...

துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது தானாகவே இயங்கும் முறை.

Image
துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது தானாகவே இயங்கும் முறைக்கு மாறிவிட்டதாகவும்,              ஸ்மார்ட் கார்களில் உள்ள கேமிராவும், சென்சாரும் தான் நம்முடைய டிரைவிங் டெஸ்டை தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஒரு ஆண் கத்தாரில் மரணம்!

இலங்கை அம்பாறை மாவட்டம்  பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும் கோட்டைக்கல்லாற்றை வசிப்பிடமாகவும்.கொண்ட பொன்னுத்துரை குலேந்திரன் (51) நேற்று 27 ஆம் திகதி கத்தாரில் மரணமானார். வேலைக்கு சென்று வந்து தூங்கியவர் மறுநாள்சடலமாக  தங்குமிடத்தில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கத்தார் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குவைத்தில் வேலைக்கு வரும் இந்திய தொழிலாளர்கள் தவிர்க்க வேண்டிய கம்பெனிகள் மற்றும் இந்திய ஏஜென்சிகள் பட்டியல் விபரங்கள்:

Image
குவைத்தில் இந்திய தூதரகம் தங்கள் அதிகாரபூர்வ இந்திய அரசின் வலைத்தள பக்கத்தில் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது  இந்த தகவல் தற்போது குவைத்தில் உள்ள பல செய்தி தளங்கள் செய்தியாக பதிவு செய்துள்ளது.               குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல இந்திய தொழிலாளர்கள் போலியான ஏஜென்சிகள் இடைத்தரகர்கள் மற்றும் இல்லாத வளைகுடா நாடுகளில் இல்லாத மற்றும் மூடப்பட்ட உள்ள பல்வேறு நிறுவனங்கள் பெயரில் மேலும் பல்வேறு வழிகளில் போலியான வேலை வாய்ப்புகள் சம்மந்தமான அழைத்து வந்து ஏமாற்றப்படுவதுடன், பல்வேறு சித்திரவதை மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் செய்திகள் அன்றாடம் பார்க்கிறோம்.            இந்நிலையில் குவைத்தில் சமீபகாலத்தில் 200 ற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் இவ்வாறான அழைத்து வரப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு 72 இந்திய தொழிலாளர்கள் தவித்து வருவது வரையில் பல பிரச்சனைகள் இந்திய தூதரகம் மற்றும் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மேற்பார்வை உள்ள மற்றும் தீர்வு காணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.       ...

குவைத்தில் இலங்கை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

Image
குவைத்தில் இலங்கை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.Saad Al-Abdullah பகுதியில் முதலாளி (Sponsor) யின் வீட்டில் வைத்து தன்னைத்தானே தீ வைத்து கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்மணி Jahra மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும் ஆனால் அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டதால் மரணமடைந்தார் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயரமான செய்தியை குவைத்தின் பிரபலமான தினசரி நாளிதழ் Al-abha செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. தற்கொலை செய்த பணிப்பெண் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் செய்தியில் குறிப்பிடவில்லை.இது கொலையா.....?? அல்லது தற்கொலையா.... என்பது அந்த கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.