கத்தார் எயார்வெய்ஸ்ஸில் மயங்கி விழுந்த பயணி! இலங்கையில் அவசர தரையிரக்கம்!
கத்தார் நாட்டின் விமானச் சேவையான கத்தார் எயார்வெய்ஸ் க்குச் சொந்தமான விமானம் ஒன்று இலங்கையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (ஜுன் 30) பதிவாகியுள்ளது.
கத்தாரின் தோஹா நகரிலிருந்து அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குப் பறந்து கொண்டிருந்த A-380 900 ரக விமானத்தில் இருந்த பயணி ஒருவர் சுகயீனம் காரணமாக மயங்கி விழுந்தமையினால் சிகிச்சைக்காக இலங்கை பண்டார நாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிரக்கப்பட்டதாக விமான நிலையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment