குவைத்தில் இந்திய தூதரகம் தங்கள் அதிகாரபூர்வ இந்திய அரசின் வலைத்தள பக்கத்தில் ஒரு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது இந்த தகவல் தற்போது குவைத்தில் உள்ள பல செய்தி தளங்கள் செய்தியாக பதிவு செய்துள்ளது. குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல இந்திய தொழிலாளர்கள் போலியான ஏஜென்சிகள் இடைத்தரகர்கள் மற்றும் இல்லாத வளைகுடா நாடுகளில் இல்லாத மற்றும் மூடப்பட்ட உள்ள பல்வேறு நிறுவனங்கள் பெயரில் மேலும் பல்வேறு வழிகளில் போலியான வேலை வாய்ப்புகள் சம்மந்தமான அழைத்து வந்து ஏமாற்றப்படுவதுடன், பல்வேறு சித்திரவதை மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் செய்திகள் அன்றாடம் பார்க்கிறோம். இந்நிலையில் குவைத்தில் சமீபகாலத்தில் 200 ற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் இவ்வாறான அழைத்து வரப்பட்டு, சில தினங்களுக்கு முன்பு 72 இந்திய தொழிலாளர்கள் தவித்து வருவது வரையில் பல பிரச்சனைகள் இந்திய தூதரகம் மற்றும் குவைத் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் மேற்பார்வை உள்ள மற்றும் தீர்வு காணவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ...